பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.

இதற்காக மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு நேற்று காலை விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் சிறையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிள்ளையான் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை