506 கிலோ பீடியை கடத்த முற்பட்ட 6 பேர் கைது

506 கிலோ பீடியை கடத்த முற்பட்ட 6 பேர் கைது-6 Arrested with 506kg Beedi Leaves-SLN

சட்டவிரோதமான முறையில் 506 கிலோ கிராம், பீடித் இலையை கொண்டுவர முயற்சித்த 6 பேர் மாரவில கடற்பரப்பில்  கடற்டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் நேற்று (05) கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேசாலை, பன்னல, எழுவக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும்,  அவர்கள்   18 - 50 வயது இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

506 கிலோ பீடியை கடத்த முற்பட்ட 6 பேர் கைது-6 Arrested with 506kg Beedi Leaves-SLN

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து பீடிகள் இலைகள் நிறைக்கப்பட்ட 16 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பீடி இலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாராவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்- றஸ்மின்)

Sun, 09/06/2020 - 20:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை