சட்டவிரோதமான முறையில் 506 கிலோ கிராம், பீடித் இலையை கொண்டுவர முயற்சித்த 6 பேர் மாரவில கடற்பரப்பில் கடற்டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பரப்பில் நேற்று (05) கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போதே, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேசாலை, பன்னல, எழுவக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 18 - 50 வயது இடைப்பட்டவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து பீடிகள் இலைகள் நிறைக்கப்பட்ட 16 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பீடி இலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாராவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்- றஸ்மின்)
from tkn