வவுனியாவில் நள்ளிரவு சோதனையில் 49 சாரதிகள் மீது நடவடிக்கை

வவுனியாவில் நள்ளிரவு சோதனையில் 49 சாரதிகள் மீது நடவடிக்கை-Legal Action Against 49 Drivers-4Hr Round up at Vavuniya City

வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட 4 மணி நேர வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 49 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது ,

நேற்று இரவு 11.00 மணியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணி வரையிலும் வவுனியா நகர்ப்பகுதியில் விஷேட வீதி சோதனை நடவடிக்கை போக்குவரத்துப் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது . இவ் விஷேட நடவடிக்கையில் 28 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 49 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

முக்கியமாக மது போதையில் 06 சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தாத 03 பேருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 40 பேர் தலைக்கவவசம் , கைத்தொலைபேசி பாவனை , காப்புறுதிப்பத்திரம் மோட்டார் ஆவணம் இன்றியும் போன்ற ஏனைய குற்றங்களுக்காக அவர்களிடம் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நகரில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

(வவுனியா நிருபர் - பாலநாதன் சதீஸ்)

Sat, 09/12/2020 - 15:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை