மர்ஹூம் மத்தீன் கிண்ண 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டம்

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகம் சம்பியன்

அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மர்ஹூம் எஸ்.எம்.ஏ. மத்தீன் கிண்ண 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த வாரம் மருதமுனை மஷூர்மௌலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் லீக்கின் தலைவர் வை.கே. றஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி போட்டியில் கலந்துகொண்ட கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தினர் மருதமுனை ஈஸ்ரன் யூத் விளையாட்டுக் கழகத்தினரை (3-0) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு கிண்ணத்தினை சுவிகரித்துக் கொண்டது.

போட்டியின் போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட கிழக்கு மாகாண இணைப்பாளர் சட்டத்தரணி எம். எஸ். எப். சாமிர் பிரதம அதிதியாகவும், விஷேட அதிதிகளாக மர்ஹூம் மத்தின் அதிபர் அவர்களின் புதல்வர் ஏ. எம். றஜி ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம். ஜமால்தீன், அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம். ஐ. எம். ஏ. மனாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். போட்டியின் போது உடற்கல்வி ஆசிரியர் ஏ. பாதுஷா மத்தியஸ்தராகக் கடமையாற்றினார்.

கல்முனை சுழற்சி நிருபர்

Sat, 09/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை