லிபியாவில் அகதிப் படகு கவிழ்ந்து 24 பேர் பலி

லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற இரப்பர் படகு கவிழ்ந்த விபத்தில் 24பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.  

இதுதொடர்பாக சர்வதேச இடம் பெயர்வு அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், லிபியா அருகே மத்தியதரைக் கடலில் 3இரப்பர் படகுகளில் அகதிகள் ஏறிச் செல்வதை லிபிய கடல்படையினர் கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.  

அதில் ஒரு படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர் என்றார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லிபியா கடலோர படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.  

அப்போது 24 அகதிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், மாயமான சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் லிபிய கடல் படையினர் தெரிவித்தனர்.  

Thu, 09/17/2020 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை