பட்லர் அதிரடியால் இங்கிலாந்து தொடரை 2- 0 எனக் கைப்பற்றியது

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ரி 20 போட்டியில் 158 இலக்கை 4 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டி தொடரை கைப்பற்றியது.

அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முதலில் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியது. வார்னர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 3 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது அவுஸ்திரேலியா.

அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ஓட்டங்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ஓட்டங்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ஓட்டங்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில் 23 ஓட்டங்களும் அடிக்க அவுஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் அடித்தது.

பின்னர் 158 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோவ் 9 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பட்லர் 54 பந்தில் 77 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி − 20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.

3-வது மற்றும் கடைசி ரி − 20 போட்டி இன்று (செப்டம்பர் 8-ம் திகதி) நடக்கிறது. அதன்பின் எதிர்வரும் 11-ம் திகதி முதல் 16-ம்திகதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை