தப்பிச்சென்ற 14 பேரை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு

சர்வதேச பொலிஸாரை நாடியுள்ள CID       

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள குற்றச்செயல்களில் ஈடுபடும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வெளிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நீதிமன்ற செயற்பாடுகளுக்கு தேவையான 14 சந்தேகநபர்கள் தொடர்பில் கடந்த இரு மாதங்களுள் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த 14 சந்தேகநபர்களும் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். 14 பேரையும் விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை