இரட்டை குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

இந்தோனேசிய நிலச்சரிவு:

இந்தோனேசியாவின் தரகான் வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசிய அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

கனத்த மழையும் பலத்த காற்றும் வீசியதைத் தொடர்ந்து, தரகான் வட்டாரத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் சில வீடுகள் புதையுண்டதோடு 19 வீடுகள் சேதமடைந்தன.

உயிரிழந்த 11 பேரில் ஐவர் குழந்தைகளாகும். மேலும் நால்வர் உயிரோடு மீட்கப்பட்டனர்.

இந்தோனேசியாவில் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளமும் ஏற்படுவது வழக்கம். அங்கு சுமார் 125 மில்லியன் பேர் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையம் மதிப்பிடுகிறது.

அந்த எண்ணிக்கை இந்தோனேசிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை