மருதமுனை யூனிவர்ஸ் கழகத்தின் 100 ஆவது உதைபந்தாட்டப்போட்டி

கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றி

மருதமுனை யூனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நூறாவது கண்காட்சி உதைபந்தாட்டப்போட்டி கடந்தவாரம் மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத்தொகுதி மைதானத்தில் நடைபெற்றபோது கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகம் தன்னை எதிர்த்தாடிய யூனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினை (03- – 01) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது. யூனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளருமான தேசமானிய கே. எம். றிஸ்வி யஹ்சர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கண்காட்சி உதைபந்தாட்ட விழா வைபவத்தின்போது பிரதம அதிதியாக சட்டத்தரணி எம். எம். நப்ஸர், கௌரவ அதிதியாக ஆசிரியர் எம் முகம்மட் மிஹ்லார் , விஷேட அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ. எம். சிபான் ஆகியோரும் கலந்துகொண்டு கிண்ணங்களையும், பதக்கங்களையும் வழங்கி வைத்தனர்.

(கல்முனை சுழற்சி நிருபர்)

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை