கடவையை மீறி சென்ற லொறி புகையிரதத்துடன் விபத்து; லொறி சாரதி பலி

புகையிரதமும் லொறியொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில், குறித்த லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுமுல்ல புகையிரதக் கடவையில் நேற்று (15) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த புகையிரதக் கடவையில் பாதுகாப்பு நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில், நுழைவாயிலுக்கு வலது பக்கமாகச் சென்ற லொறியானது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sun, 08/16/2020 - 14:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை