பிரதமர் மஹிந்தவுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து

பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட மகத்தான வெற்றியையடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். இதனையடுத்து மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஸீத் ஆகியோரும் பிரதமர் மஹிந்தவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் நேற்று தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த சமயம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இலங்கை மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் எமது நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவதற்கு உங்களுடன் நெருங்கிய செயற்பாடுகளை மேற்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம். இலங்கையும் இந்தியாவும் மாலைதீவும் நண்பர்கள் மட்டுமன்றி உறவினர்கள் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

Fri, 08/07/2020 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை