யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், 67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் திடீரென்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இத்தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(யாழ்.விசேட நிருபர்- மயூரப்பிரியன்)
Thu, 08/06/2020 - 10:01
from tkn