தபால் மூலம் வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகிறது. தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை இன்று நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறுதி தேர்தல் பெறுபேறுகள் இன்று நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு பெறுபேறுகள் நாளை நள்ளிரவுக்கு முன்னர் முழுமையாக வெளியிடக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Thu, 08/06/2020 - 10:04
from tkn