துணை பிரதமர் பதவி; ஊடக வதந்திகளை மறுக்கிறார் தயாசிறி

புதிய அரசாங்கத்தில் துணைப் பிரதமர் நியமனம் தொடர்பாக ஊடகங்களில்  வெளிவரும் செய்தி புனையப்பட்ட கதைகள் என இராஜாங் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இவ்வாறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், துணைப் பிரதமர் என்ற தலைப்பு ஊடகங்களால் புனையப்பட்ட ஒன்று.  தற்போதைய அரசாங்கத்தில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

ஊடகங்கள் வதந்திகளை பரப்பிவிட்டு பின்னர் அவற்றினை உண்மை அறிக்கைகளாக மாற்ற தங்களை கேள்வி கேட்க முடிவு செய்கின்றன. மேலும் நாங்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்தே அவதானம் செலுத்தி வருகிறோம்.

அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்றார்.

Thu, 08/27/2020 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை