ஆப்கானின் ஒரே பெண் அமைதி பேச்சுவார்த்தையாளர் மீது சூடு

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் ஆப்கானின் ஒரே பெண் உறுப்பினரான பெளசியா கூபி, காபுலுக்கு அருகில் துப்பக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

தலைநகருக்கு அருகில் பர்வான் மாகாணத்தில் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் கடந்த வெள்ளிக்கிழமை 45 வயது கூபி மற்றும் அவரது சகோதரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கூபி, தலிபான்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது கையிலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதாகவும் ஆபத்து இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலுடன் தமக்கு தொடர்பு இல்லை என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டிலும் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து கூபி உயிர் தப்பியிருந்தார்.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை