இந்தியாவின் சுதந்திர தினம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போதைய நிலைமை சவாலான காலகட்டமாக இருக்கின்றபோதும் எமது இனங்களின் இறைமை மற்றும் சுதந்திரத்தை போற்றுவது இன்னும் முக்கியமானது என்பதுடன் இரு நாடுகளுக்கிடையேயுமுள்ள உறவுகள், நட்பு மேலும் வலுப்பெற வேண்டுமென்றும் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தினூடாகவே இந்த வாழ்த்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,பிரதமர் மஹிந்தவின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'உங்கள் நல்வாழ்த்துக்களுக்காக நன்றி' இலங்கையுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நட்பின் சிறப்புப் பிணைப்புகளில் உறுதியாக இருக்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Sun, 08/16/2020 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை