மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவேன் - அனுஷியா

தனித்தா, கூட்டணியா என்பது பின்னர்;

மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷியா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இணையவழி கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் அப்போதைய அரசியல் கள நிலவரத்தை அடிப்படையாகக்கொண்டே முடிவெடுக்கப்படும் எனவும் அனுஷியா சந்திரசேகரன்  கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். “இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை என்றும், ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை