மாத்தளை ஜொலி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

மாத்தளை ஜொலி போய்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் உக்குவளை கோல்ட்மூன் விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் 4-:3 என்ற கோல் அடிப்படையில் உக்குவளை கோல்ட் மூன் விளையாட்டுக்கழகத்தை தோல்வியடையச் செய்து மாத்தளை ஜொலி போய்ஸ் விளையாட்டுக்கழகம் மாத்தளை மாவட்ட கிராம சேவகர் பிரிவுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

வருடத்தோறும் மாத்தளை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள் இயங்கும் விளையாட்டுக்கழகங்களிற்கிடையில் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டி கடந்த சில வாரங்களாக மாத்தளை நகரில் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு மாத்தளை ஜொலி போய்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் உக்குவளை கோலட்மூன் விளையாட்டுக்கழகம் என்பன தெரிவாகின.

இதன் அடிப்படையில் இறுதிப்போட்டி கடந்த 16 ம் திகதி இடம்பெற்ற போது ஜொலி போய்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி போட்டி மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக இடம் பெற்ற இவ் உதைப்பந்தாட்ட போட்டியில் அரையிறுதி நேரம் வரை எந்தவொரு அணியும் புள்ளிகளை பெற்றுக் கொள்ளவில்லை.

அரையிறுதி ஆட்டத்தின் பின்னர் போட்டி மிகவும் விறுவிறுப்புடன் இடம் பெற்றதோடு இரு அணிகளின் ஆதரவாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பலத்த கரகோசத்தின் மத்தியிலும் எந்தவொரு அணியும் புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் போட்டியின் நடுவர்களாக இயங்கிய பிரபல உதைபந்தாட்ட நடுவர் கே.ஆர்.எம். ஹாரிஸ், முகமட் இல்காம் , அதுல வீரக்கொடி ஆகியோர் பெனல்டி மூலம் சந்தர்ப்பங்களை கொடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க எடுக்கப்பட்ட முடிவுடன் 4:3 என்ற கோல் அடிப்படையில் போட்டியில் ஜொலி போய்ஸ் வெற்றிப் பெற்றமை குறிப்பிடப்பட்டது.

உக்குவளை விசேட நிருபர்

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை