யு.இ.எஃப்.ஏ சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், முதல் காலிறுதிப் போட்டியில் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி (பி.எஸ்.ஜி) வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
எஸ்டாடியோ டா லூஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியும், அட்லாண்டா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், 26ஆவது நிமிடத்தில் அட்லாண்டா அணியின் வீரரான மரியோ பசாலிக் அணிக்காக முதல் கோலை அடித்துக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து போட்டியின் 90ஆவது நிமிடத்தில் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் வீரரான மார்க்கியுனோஸ் அணிக்காக முதல் கோலை புகுத்தினார்.
இதனையடுத்து போட்டியின் 93ஆவது நிமிடத்தில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் மற்றொரு வீரரான எரிக் மாக்சிம் சவுபோ மோட்டிங் அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார்.
இதற்கமைய போட்டியின் இறுதியில் 2-:1 என்ற கோல்கள் கணக்கில் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
from tkn