கனகராயன்குளத்தில் காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு

கனகராயன்குளத்தில் காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு-75-Yr Old Person's Dead Body Found With Injury-Kanakarayankulam-Mannar

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில், காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

நேற்று (22) குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று காணப்படுவதாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளத்தில் காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு-75-Yr Old Person's Dead Body Found With Injury-Kanakarayankulam-Mannar

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், சடலத்தை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில், கொலை என்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனகராயன்குளத்தில் காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு-75-Yr Old Person's Dead Body Found With Injury-Kanakarayankulam-Mannar

சடலம் தொடர்பான மரண விசாரணைக்காக, வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

க. இந்திரகுமார் எனும் 75 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வவுனியா நிருபர் - பாலநாதன் சதீஸ்)

Sun, 08/23/2020 - 16:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை