ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நானும் தயார்

கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்காக தானும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருப்பதாக அதன் தலைவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பில் (07) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான நேர்மையான, ஊழலற்ற, தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இந்த முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.  

வடக்கு, கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.  

தேர்தல் முடிவடைந்த பின்னர், ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ள சில செயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப் பாதையை கட்டியம் கூறிநிற்கின்றதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

தமிழ் இனத்தின் நன்மை கருதி தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது.  

அதற்கு தானும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

எஸ். நிதர்ஸன்

Sun, 08/09/2020 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை