சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட வசதிகளை வழங்கியமை மற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் மற்றும் ஏனைய 03 அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ கடந்த 02ஆம் திகதி பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.(சு)

Mon, 08/31/2020 - 16:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை