யானை மோதுண்டு பலி; வடக்கு புகையிரத சேவை ஸ்தம்பிதம்

புகையிரதத்துடன் காட்டு யானையொன்று மோதியதை தொடர்ந்து, வடக்கு புகையிரத வழித்தடத்திலான புகையிரத சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த ஶ்ரீதேவி கடுகதி புகையிரதமானது, மாங்குளத்திற்கும் புளியங்குளத்திற்கும் இடையில் இன்று (09) அதிகாலை 3.45 மணியளவில் காட்டு யானையொன்றுடன் மோதியுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

இதனைச் சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.

புகையிரதத்துடன் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.

Sun, 08/09/2020 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை