தேர்தல் பிரசார சமர் நேற்று நள்ளிரவுடன் ஓய்வு

- இன்றும் நாளையும் அமைதிக்காலம்

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று (02) நள்ளிரவுடன் நிறைவுற்றுள்ள நிலையில் இன்றும் நாளையும் அமைதிக்காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றும் நாளையும் அமைதிக்காலம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அமைதிக்காலத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட தடை  விதிக்கப்பட்டுள்ளதுடன், இக்காலத்தில் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைதிக்காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய அமைதிக்காலத்தில் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல்,  வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் என்பவற்றுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அமைதிக்காலப் பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)

Mon, 08/03/2020 - 15:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை