துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தவர் கைது

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகன்கொட பிரதேசத்தில், சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் தங்காலை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வலஸ்முல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

02 துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள், வெற்று தோட்டா உறை, வெல்டிங் இயந்திரம் மற்றும் துப்பாக்கி தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வலஸ்முல்லை, மெதகன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (13) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

Thu, 08/13/2020 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை