தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் பலி

- மற்றுமொருவர் காயம்

கேகாலை நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (05) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, கூரிய ஆயுதத்தினால் இருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிலொருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இதில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்தவற்காக விரிவான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Thu, 08/06/2020 - 10:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை