கரு தலைவரானால் இணைவது குறித்து சிந்திக்கலாமாம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டால் அக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக நினைத்துப் பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது,

ரணில் விக்கிரமசிங்க வெளியேறிய பின்னர் கரு ஜயசூரியவிடம் தலைவர் பொறுப்பை வழங்கினால் நாங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க முடியும். அத்தோடு, குறித்த கட்சி முன்னேற வேண்டுமென்றால், அதன் பொறுப்பை சஜித்துக்கு வழங்க வேண்டும் என்றார்.

Thu, 08/27/2020 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை