யாழ் – கொழும்பு ரயில்சேவை மீண்டும் வழமைக்கு திரும்பல்

ஆசனப் பதிவு செய்யும் பணி ஆரம்பம்

யாழ் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். ரயில் நிலைய பிரதான ரயில்நிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தின் பின்னர் தற்போதுள்ள ரயில்சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ். - கொழும்பு ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன. கடந்த மாதம் மீண்டும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமையான ரயில் சேவைகள் நடைபெற்று வருகின்றன.    கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி ரயில்சேவை எதிர்வரும் 29 ,30 ,31 ,மற்றும் 01ஆம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.  கொரோணா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இச் சேவை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ். ரயில் நிலையத்தில் மேற்கொள்ள முடியுமென யாழ். பிரதான ரயில் நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்  

Wed, 08/26/2020 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை