சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் மாபெரும் தேர்த் திருவிழா இன்று வீதி உலா வரும். ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற விழா கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இன்று தேர் வீதி உலா நடைபெறும்.
காலை 8 மணி முதல் வசந்தகால பூசையும் அதைத் தொடர்ந்து தேர் வீதி உலாவும் இடம்பெற்று பகல் 11 மணிக்கு முடிவடையும்.
அதையடுத்து மாலை 5 மணிக்கு சுவாமிக்கு பச்சை சாத்தப்பட்டு வழமை போல் ஆலயம் வந்தடையும்.அதைத் தொடர்ந்து விசேட அபிஷேக வழிபாடுகளுடன் அன்றை நிகழ்வு நிறைவடையும்.நாளை சிலாபம் மாயவனாற்றில் தீர்த் தோற்சவம் நடைபெறும்.கொரோனா வைரஸ் பரவலையடுத்து அடியார்கள் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
சிலாபம் தினகரன் நிருபர்
Mon, 08/31/2020 - 06:00
from tkn