கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

வயல்வெளிக்கு அருகில் கூரிய ஆயுதமொன்றினால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (10) நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகொடவத்த, போகொடகம, தொரகடவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவ, யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இக்கொலைக்கான காரணம் மற்றும் இக்கொலையை புரிந்த சந்தேகநபர் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கொலைச் சந்தேகநபரை கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Tue, 08/11/2020 - 12:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை