எதிரணி தீய நோக்குடைய பொய்யான பிரசாரம் முன்னெடுப்பு

சர்வாதிகாரத்தை நோக்கி அரசு செல்கிறதாம்; பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கண்டனம்

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது தீய நோக்கத்துடனான பொய் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஆட்சிசெய்த வேளை மக்கள் சுதந்திரமாகயிருந்தார்களா என அவர்களை கேட்போம். சர்வாதிகார நோக்கில் கதைப்பவர்கள் உண்மையில் அறிவற்றவர்கள். நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரிகளாகயிருந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது சர்வாதிகார போக்குகள் காணப்பட்டன. தலைவர்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் நடந்துகொண்டனர். குற்றச்சாட்டுகளை சுமத்தாமலே எங்களை சிறைக்கு கொண்டு சென்றார்கள். போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யுத்த வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நலனுக்கு ஏற்றவிதத்தில் சட்டங்களை இயற்றினார்கள், தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். மக்களின் உணர்வுகளை முற்றாக புறக்கணித்தார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் மக்களின் கருத்துக்களுக்கும் துயரங்களுக்கும் உரிய முறையில் பதிலளித்தவர்கள் நாங்களே என தெரிவித்துள்ளார்.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை