ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ருவன் விஜேவர்தன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவிற்கு வருகை தந்த முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, அவர் இன்று (18) காலை, அவ்வாணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவிற்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை, தற்போது விளக்கமறியலில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு, இன்றையதினம், சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்து வரப்பட்டார்.

Tue, 08/18/2020 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை