சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்

உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதன் பிரகாரம் மில்லி மீற்றர் -09 ரக கைத் துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வெலிகடை , மெகசின் , கொழும்பு தடுப்புக்காவல் சிறை , நீர்கொழும்பு , பூஸா மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.  

Thu, 08/06/2020 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை