சக வேட்பாளர்கள் எதிர்த்தபோதும் ஸ்ரீதரன் மட்டுமே ஆதரவு தந்தார்

அவர் தமிழரசு கட்சி தலைவரானால் ஆதரிப்பேன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியை சி.ஸ்ரீதரனுக்கு வழங்கினால் ஆதரிப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவ் ஊடகத்துக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சிக்கு எதிராக நான் நடந்துகொள்பவனல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக ஸ்ரீதரன் மட்டுமே இருந்தார்.

இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேனென சிறீதரன் கூறியுள்ளார். தனக்கு அந்த பதவியை தருமாறு அவர் கோரவில்லை. அவ்வாறு சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என்றார்.

 

Wed, 08/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை