திருத்தங்கள் மேற்கொள்கையில் இருதரப்பு உடன்பாடு அவசியம்

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

இரு தரப்பு உடன்பாட்டுடன் சகல திருத்தங்களும் இடம்பெற வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். புதிய சபாநாயகர் தெரிவையடுத்து கருத்துத் தெரிவித்த அவர்,  

மு.கா சார்பில் எமது பாராட்டை தெரிவிக்கிறோம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய கௌரவம் கிடைத்துள்ளது.

கடந்த காலத்தில் பல மறுசீரமைப்புகள் இடம்பெற்றன. இரு தரப்பு உடன்பாட்டுடன் சகல திருத்தங்களும் இடம்பெற வேண்டும். அரசியலமைப்பு பேரவையின் தலைவராகவும் தெரிவாகியுள்ளீர்கள். சபாநாயகருக்குறிய பொறுப்பை சரிவர நிறைவேற்றுவீர்களென எதிர்பார்க்கிறோம்.  

Fri, 08/21/2020 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை