நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்கும் வி.மறியல் நீடிப்பு

- போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் 13 பேருக்கும் வி.மறியல்

சிறைக் கைதிகளுக்கு வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ மற்றும் 03 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

பிடியாணை பிறக்கப்பட்டு 11 நாட்களாக தேடப்பட்டு வந்த  அநுருத்த சம்பாயோ குருணாகலில் வைத்து இம்மாதம் 02ஆம் திகதி  கைது செய்யப்பட்டார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரி காலிங்க கலுஅக்கல, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளதோடு, ஏனைய இரு சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் 13 பேருக்கும், எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 08/18/2020 - 16:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை