இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு

லங்கன் பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28-ம் திகதி முதல் செப்டம்பர் 20-ம் திகதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது.

இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலை மையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் இலங்கையைச் சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் ‘சகலதுறைவீரர்’ இர்பான் பதான், நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உட்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கன் பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை