பெண் செயற்பாட்டாளர் ஈராக்கில் சுட்டுக்கொலை

ஒரு வாரத்திற்குள் மூன்றாவது சம்பவமாக ஈராக்கின் பஸ்ரா நகரில் பெண் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உள்ளூர் அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடும் மருத்துவர் ஒருவரான ரிஹாம் யாகூப் என்பவர் கடந்த புதனன்று அடையாளம் காணப்படாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

டஹ்சீம் ஒசாமா என்ற மற்றொரு செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பஸ்ரா நகரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பிறிதொரு சம்பவத்தில் கார் வண்டியில் சென்றுகொண்டிருந்த மற்றொரு செயற்பாட்டாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பஸ்ரா பொலிஸ் பிரதானி மற்றும் ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளை பிரதமர் முஸ்தபா அல் காதிமி பணி நீக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை