அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சினேகபூர்வ உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இறக்காமம் ஐ.ஆர்.எப்.சீ.கனிஷ்ட அணியினர் வெற்றி பெற்றனர்.
சோபர் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உதைப்பந்தாட்ட வீரர் எம்.எம்.ஏ.சியாம் தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 23ஆந் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜுதீன், அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.ஆலோசகர் ஐ.எல்.எம்.சஹீல்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ்,சோபர் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பாந்தாட்ட சிரேஷ்ட வீரர் ஜே.சறுக்,ஏற்பாட்டாளர் முஹம்மட் சிறாஜ்,ஆசிரியர் ஏ.சீ.எம்.ஹாரீத் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் கனிஷ்ட அணியினரும் இறக்காமம் ஐ.ஆர்.எப்.சீ.கனிஷ்ட அணியினரும் விளையாடினர்.குறிப்பிட்ட நேரம் வரையும் இரு அணிகளும் விறுவிறுப்புடன் விளையாடி தலா ஒவ்வொரு கோலினை போட்டதனால் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
பின்னர் நடுவரின் தீர்மானத்திற்கமைவாக பெனல்டி மூலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.இதன்படி 5 : 3 என்ற கோல் அடிப்படையில் போட்டியில் ஐ.ஆர்.எப்.சீ.கனிஷ்ட அணியினர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)
from tkn