தமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம்

இந்திய புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரதமர் பேட்டி

வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறுகையில்,

எனது முன்னைய ஆட்சியின் போது வடபகுதியில் இருந்த கடுமையான சூழ்நிலைகளின் மத்தியிலும் பெருமளவு அபிவிருத்தி பணிகளை செய்தேன். துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம், துரிதப்படுத்தவுள்ளோம்.

இனம் மற்றும் கலாசார பின்னணிகளை கடந்து எங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படும். மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் வழங்குவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன எனக் கூறியுள்ளார்.

Tue, 08/11/2020 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை