வீடொன்றின் முன் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் பலி

பெலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்முல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (02) காலை 9.55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காணப்பட்ட குறித்த பெண் படுகாயத்துடன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sun, 08/02/2020 - 12:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை