வில்பத்து காடழிப்பு விவகாரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

சீ.பி. ரத்நாயக்க தெரிவிப்பு

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்தப்படும். குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கப்படுமென வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனவளத்துறை அமைச்சர் சீ. பி. ரத்நாயக்க தெரிவித்தார். வனவஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சில் (14) கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

வில்பத்து காடழிப்பு விவகாரம் இயற்கை வளத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்வபம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே விசாரணை தொடர்பான அறிக்கைகளை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவேன்.காடழிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

Sun, 08/16/2020 - 07:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை