கைதை தடை செய்யுமாறு கோரி குருணாகல் மேயர் மனு

தன்னை கைது செய்யுமாறு குருணகால் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிடிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், குருணகால் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தொல்பொருள் மதிப்புமிக்க குருணாகல் புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட 05 சந்தேகநபர்களுக்கு எதிராக குருணாகல் நீதவான் நீதிமன்றம் நேற்று (10) மீண்டும் பிடியாணை பிறப்பித்திருந்தது.

அவர்களை கைது செய்வதற்காக இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்த குருணாகல் பொலிஸார் தவறியமை காரணமாக சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த பிடியாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tue, 08/11/2020 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை