இந்தோனேசியாவின் தென் சுமத்ராவை அண்மித்த பகுதியில் 6.9ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று (19) அதிகாலை இலங்கை நேரப்படி 3.59மணியளவில் ஏற்பட்டுள்ளகுறித்த நிலநடுக்கம், அகலாங்கு 3.48S, நெட்டாங்கு 101.8 E பகுதியில் 163கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக, இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Wed, 08/19/2020 - 07:34
from tkn