தேர்தல் தொடர்பில் இதுவரை 6,483 முறைப்பாடுகள் பதிவு

- வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 6,483 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 1,128 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 5,355 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் 31ஆம் திகதி மாலை 4.00 மணி முதல், நேற்று (01) மாலை 4.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 249 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 27 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 222 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 08/02/2020 - 17:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை