வெளிநாடுகளிலிருந்து 421 பேர் வருகை

- ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 17 பேர்

- கட்டாரிலிருந்து 394 பேர்

- பிரித்தானியாவிலிருந்து 10 பேர்

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 421 பேர் இன்று (19) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 17 பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு, கட்டாரில் பணி புரிவதற்காக சென்றிருந்த இலங்கையர்கள் 394 பேர், டோஹாவிலிருந்து வந்துள்ளனர்.

அவர்களில் 210 பேர், பல்வேறு விமான நிறுவனங்களில் சேவையாற்றிய விமானக் குழு உறுப்பினர்களாவர்.  

இதேவேளை, இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த 10 பேர், லண்டனிலிருந்து இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Wed, 08/19/2020 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை