- நீர்கொழும்பு சிறைக்காப்பாளரின் வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில் T56 தோட்டாக்கள்
புதரொன்றில் வீசப்பட்ட நிலையில் 4 துப்பாக்கிகள் மற்றும் 8 மெகசின்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று (02) முற்பகல் 10.30 மணியளவில், கல்கிஸ்ஸை, இதிகஹதெனிய பிரதேசத்தில் வைத்து குறித்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள கால்வாயுடன் இணைந்த வகையில் காணப்பட்ட காட்டுப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் 4 துப்பாக்கிகள் மற்றும் அதற்கான 8 மெகசின்களை, கொழும்பு குற்றப் பிரிவு (CCD) அதிகாரிகள் மீட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் CCD அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காப்பாளர் ஒருவரின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட T56 வரை துப்பாக்கிகளுக்கான 13 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
from tkn