வெளிநாடுகளிலிருந்து 322 பேர் வருகை

- ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 பேர்
- கட்டாரிலிருந்து 42 பேர்

ஐக்கிய அரபு இராச்சியத்திலும் கட்டாரிலும் பணியாற்றுவதற்காக சென்றிருந்த இலங்கையர்கள் 322 பேர் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து 42 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த விமான பயணிகள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Sun, 08/30/2020 - 10:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை