கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 306 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
சீனாவிலிருந்து 10 பேர் ஈஸ்ட்டன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலும், ஓமானிலிருந்து 296 பேர் ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானத்திலும் நேற்று (14) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Sat, 08/15/2020 - 09:38
from tkn