வெளிநாடுகளிலிருந்து 305 பேர் வருகை

- ஜோர்தானிலிருந்து 285 பேர்

- கட்டாரிலிருந்து 20 பேர்

ஜோர்தானிலும் கட்டாரிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 305 பேர் இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் டோஹாவில், வெளிநாட்டு வர்த்தகக் கப்பலில் பணியாற்றிய 20 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்தோடு, ஜோர்தான் அம்மான் நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தில் 285 பேர் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ள அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Tue, 08/18/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை